தனது மகள் காதலனுடன் வீட்டில் அறை ஒன்றில் இருப்பதனை அறிந்து கொண்ட தாய், கூரிய கத்தியினால் தாக்கி காதலன் மீது திராவக தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் தெதிகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
அதனையடுத்து குறித்த தாய், தெதிகம காவல்துறை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகளின் தாயார் தொழிலுக்கு சென்றுள்ள நிலையில், மகள் தனது காதலனை வீட்டுக்கு அழைத்துள்ளார்.
மகளின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட தாய், தொழிலுக்கு செல்வதுபோல் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
அதன்போது, மகள் தனது காதலனுடன் வீட்டின் அறையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
தனது மகளை கூரிய கத்தி ஒன்றினால் தாக்கிய தாய், காதலன் மீது திராவகத்தை வீசியுள்ளார்.
இதன்போது காயமடைந்த இருவரும், கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகள் அவரது காதலனால் கடந்த காலத்தில் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பல முறை இவ்வாறு தாயார் வீட்டில் இல்லாத நேரம், காதலன் வந்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.