இளம்பெண்ணின் மார்புப்பகுதியும், முதுகுப்பதியும் அளவுக்கு அதிகமாக பெரிதாக இருந்ததால் சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரிகள் அவரை சோதனை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் சீனாவில் ஹாங்கான் பார்டரில் உள்ள ஒரு விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
அதன்போது, அந்த பெண் மார்புகள் மற்றும் முதுகுப்பகுதியில் 102 ஐபோன்கள் மற்றும் 15 வாட்சுகளை சுற்றி வைத்து டேப் கொண்டு மூடியுள்ளது தெரிய வந்தது
இதனை அடுத்து அந்த பெண்ணை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் அவர் கூலிக்காக கடத்தி செல்பவர் என்றும், அவருக்கு மேல் ஒரு நபர் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.