காஜல், தமன்னா, அனுஷ்கா, திரிஷாவுடன் ஒப்பிடும்போது ஹன்சிகாவின் மதிப்பு தற்போது பின்தங்கி இருக்கிறது. அதிலிருந்து மீண்டெழுவாரா ஹன்சிகா. பல நடிகைகள் தங்களது 14 அல்லது 15 வயதில் நடிக்க வருகிறார்கள். ஆனால் அதைவிட சிறுவயதிலேயே நான் எனது நடிப்பை தொடங்கிவிட்டேன். இப்போது எனக்கு 25 வயது ஆகிறது. இன்னும் நான் நீண்ட தூரம் திரையுலகில் பயணிக்க வேண்டி இருக்கிறது. எனக்கு வயது இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகள் கடுமையாக உழைக்க முடிவு செய்திருக்கிறேன்.
24 மணி நேரம் நடிப்பிலேயே கவனமாக இருப்பேன். மூச்சுவிடுவதற்கு நேரம் எடுத்துக்கொள்வதற்கு கடவுளிடம் வேண்டிகொள்கிறேன். தமிழில் என்னை, ‘எங்கேயும் காதல்’ மூலம் அறிமுகப்படுத்தியவர் பிரபுதேவா. அடுத்து அவர் தயாரித்த ‘போகன்’ படத்தில் நடித்தேன். தற்போது அவருடன் ‘குலேபகாவலி’ படத்தில் நடிக்கிறேன். அவர் இயக்குனராக இருந்தபோது எனக்கு அவரிடம் எந்த கேள்வியும் இருக்காது. இப்போது அவரிடம் நிறைய கேள்வி கேட்கிறேன்.
ஒவ்வொரு முறை அவர் படப்பிடிப்பிற்கு வரும்போதும் யாராவது ஒருவர் பற்றி நான் மிமிக்கிரி செய்துகாட்டிக் கொண்டிருப்பேன். அதை கண்டு சிரிப்பார். நடன காட்சி படமாக்கும்போது எனக்கு மிகவும் பதற்றமாக இருக்கும். ஆனால் பிரபுதேவா ரொம்ப கூலாக இருப்பார். கவலையை விடு உன்னை நான் நடனம் ஆட வைக்கிறேன் என்று சமாதானப்படுத்துவார். சங்கமித்ரா படத்தில் நடிக்கிறேனா என்கிறார்கள். அதுபற்றி ஒன்றும் கூற முடியாது என ஹன்சிகா தெரிவித்துள்ளார்.