சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'விஐபி 2' திரைப்படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக நடிகை அமலாபோல் தெரிவித்துள்ளார்.
'இந்தத் திரைப்படத்தில் இரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். காரணம், தனுஷுடன் எனக்குத் திருமணம் நடந்துவிட்டது.திருமணமான பெண்ணாக நடிப்பது, வித்தியாசமான அனுபவமாக இருந்தது' என்கிறார் அமலா பால்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்பட ஒட்டுமொத்த படக்குழுவுமே 'விஐபி 2' திரைப்படத்தின் ரிலீஸுக்கு ஆவலாகக் காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ள அமலா பால், 'முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் அதிக ஸ்டைலிஷ்ஷாக இருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.