சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் மோகன் என்பவரின் வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது அக்கா வந்துள்ளார்.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை கறி வாங்கி குருமா வைக்கும் மோகனின் மனைவி, அன்று மட்டும் எதுவும் விசேசமாக எதுவும் செய்யவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மோகன், இரவு மனைவி தூக்கும் போது அவரது கழுத்தை நெறித்துக் கொன்று விட்டார்.
தனது அப்பா இப்படி செய்வதை தெரிந்து கொண்ட மோகனின் 8 வயது மூத்த மகள், பயத்தில் எதுவும் தெரியாதது போல் தூங்குவது போல் நடித்துள்ளார்.
மோகனும் சடலத்துடனேயே காலை வரை தூங்கியுள்ளார். காலை எதுவும் தெரியாது போல் வெளியே சென்றுள்ளார்.
ஆனால், இரவு முழுவதும் தூங்காமல் இருந்த அவரது மூத்த மகள் கதறி அழுது அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.
விடயம் பெரிதாக மோகன் பயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கறிக் குழம்புக்காக 2 உயிர்கள் பலியாகியுள்ளன.