பம்பலப்பிடிய - காலி வீதி பாலத்தின் அருகாமையில் நடமாடும் விபசார நிலையம் ஒன்று காவற்துறையினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது 7 பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலான குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்க பெற்றுள்ள தகவலுக்கு அமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, விபசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய சிற்றூந்து மற்றும் முச்சக்கரவண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.