காதலனின் சொந்த செலவுக்காக தன்னையே இழந்த பெண் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கொங்கோ நாட்டைச் சேர்ந்த 29 வயது இளைஞர், பெங்களூருவில் எஸ்.ஜி.பாளையாவில் தங்கி ஓசூர் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ படித்து வருகிறார்.
ஆங்கில மொழி புலமையை வளர்த்துக் கொள்வதற்காக கோரமங்களாவில் உள்ள ஒரு பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு ஆந்திராவிலிருந்து வந்து பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.
அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
மேஜிக்கின் படிப்பு செலவுக்காக பணம் அனுப்புவதை அவரது பெற்றோர் நிறுத்திவிட்டனர். இதனால் படிப்பு செலவுக்காக பணம் இல்லாமல் தவித்து வந்த மேஜிக்கிற்கு அவரது காதலி பண உதவி செய்துள்ளார்.
ஆனால் அந்த பணமும் போதவில்லை என்பதால் காதலியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். அவர்கள் தங்கியிருக்கும் வீட்டிலேயே இந்த வேலையை செய்துள்ளார் அந்த இளைஞர்.
வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களை பைக்கில் அழைத்துவந்து மீண்டும் அவரே வாடிக்கையாளர்களை வீட்டில் விட்டுவிடுவார்.
இப்படியாக பலருடன் பாலியல் உறவு கொள்ளவைத்ததால் அந்த பெண் 11 முறை கர்ப்பமாகியுள்ளார். ஆனால் 11 முறையும் தன்னை கணவர் எனக் கூறிக்கொண்டு கர்ப்பத்தை கலைத்துள்ளார் மேஜிக். தன்னை திருமணம் செய்துகொள்வார் என நினைத்த பெண்ணுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின்பேரில் சுத்தகுண்டாபாளையா காவல்துறையினர் மேஜிக்கை கைது செய்து விசாரணை நடத்தினர்.
2013ஆம் ஆண்டுடன் மேஜிக்கின் விசா முடிந்த நிலையில், 4 ஆண்டுகளாக இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
காதல் என்ற பெயரில் ஏமாற்றி சொந்த செலவுக்காக பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளி இளைஞர் ஏமாற்றிய சம்பவம், மற்ற பெண்களுக்கு மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது.