மாதவன்- விஜய்சேதுபதி இணை நடிப்பில் உருவாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது, புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான "விக்ரம் வேதா" திரைப்படம்.ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பங்களிப்புடன், ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்களால் இந்த திரைப்படம் வசூலை வாரிக்குவிக்க ஆரம்பித்திருக்கின்றது.
இந்தநிலையில், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படத்தை, தமிழ்த் திரையுலகின் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் பார்த்து ரசிக்கும் வகையில் சிறப்புக்காட்சி ஒன்றை படக்குழுவினர் நேற்று மாலை ஏற்பாடு செய்திருந்தனர். படத்தை பார்த்து ரசித்த ரஜினி, ரசிகர்கள் அனைவரையும் ரசிக்க வைக்கும் வகையில் சிறப்பாக வந்திருக்கிறது "விக்ரம் வேதா. இது ஒரு மாஸ் திரைப்படம் என பாராட்டியிருக்கிறாராம்.
இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் வெளியான முதல் படமான "விக்ரம் வேதா" ற்கு கிடைத்த மிகப்பெரும் பாராட்டினால் பூரித்துப் போயிருக்கும் படக்குழுவினர், ரஜினியின் இந்த ஒரு வார்த்தையினால் படத்தின் வசூல் மற்றும் வரவேற்பு இன்னும் அதிகரிக்கும் என்ற மகிழ்ச்சியிலும் மூழ்கிக் கிடக்கின்றனராம்.