கேரளாவில் கொச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், வீட்டிலிருந்து வெளியே கிளம்பியுள்ளார்.
அதைக் கண்ட பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரரான ராகேஷ் என்பவர் பெண்ணை பின் தொடர்ந்து சென்று யாரும் இல்லாத இடத்தில் அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
தன்னை தற்காத்துக்கொள்ள முயன்ற பெண்ணை அந்த இளைஞர் வலுக்கட்டாயமாக கட்டுப்படுத்தியுள்ளார்.
தன் கற்பை காத்துக்கொள்ள வேண்டும் என்பதால் வேறு வழியின்றி இளைஞரின் நாக்கை கடித்து துண்டாக்கி, நாக்குடன் காவல்துறையில் யுவதி சரணடைந்தார்.
இதையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தேடி ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞனை கண்டுபிடித்து கைது செய்தனர்.