பிக்பாஸில் வாரம் ஒருவர் வீதம் வெளியேற்றப்பட வேண்டும். இதுவரை 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இப்போது இருப்பவர்களை வைத்து 100 நாட்கள் நிகழ்ச்சியை நடத்த முடியாது என்பதால், கடந்த வாரம் யாரையும் வெளியே அனுப்பவில்லை.
மேலும் நிகழ்ச்சிக்கு பரபரப்பை கூட்ட புதிய வரவாக பிந்து மாதவி வரவழைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சக்தி மற்றும் கணேஷ் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தேவி பட நடிகர் உள்பட 2 பேர் வருவார்கள் என்று கூறினார்கள். ஆனால் பிந்து மாதவி வந்துள்ளார்.
அதே போல இங்கிருந்து சென்றவர் யாராவது ஒருவர் மீண்டும் வர உள்ளார்கள். நமீதா, கஞ்சா கருப்பு வெளியில் நடப்பவற்றை உளறி கொட்டி விடுவார்கள். அதனால் ஆர்த்திக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் மீண்டும் ஆர்த்தி வருவார்.
ஓவியா வெளியேற்றப்பட்டார் அவர் 10வது வாரத்தில் மீண்டும் கொண்டு வரப்படுவார். அப்போதுதான் நிகழ்ச்சியும் விறுவிறுப்பாக இருக்கும் என்று பேசிக்கொண்டனர். இவர்கள் பேசி கொண்டதை பார்த்தால் ஆர்த்தி வருவார் என்றே கருதப்படுகிறது.