திரைப்பட இயக்குநர்களில் சர்ச்சைக்குரியவர் என்றால்.. அது ராம்கோபால் வர்மாதான். அடிப்படையில் தெலுங்குப்பட இயக்குநரான வர்மா, அங்கிருந்து பொலிவுட் போனார்.
ரங்கீலா போன்ற வெகு சில வெற்றிப்படங்களையும், ஏராளமான தோல்விப்படங்களையும் இயக்கிய ராம்கோபால் வர்மா, தற்போது ஹிந்தியின் no 01 ப்ளாப் டைரக்டராக இருக்கிறார்.அதனால் அவருக்கு பட வேலைகள் அவ்வளவாக இல்லை.
எனவே ட்விட்டரில் பரபரப்பாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ஓ காதல் கண்மணி படத்தைப் பார்த்துவிட்டு சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் ராம்கோபால்வர்மா.
மம்முட்டி ரசிகர்கள் அதைப் படித்தால் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வேண்டும். அல்லது குறைந்தபட்சம், ராம்கோபால்வர்மாவின் கையில் உள்ள செல்போனை பிடுங்க வேண்டும்.
ட்விட்டரில் என்ன சொல்லி இருக்கிறார் ராம்கோபால் வர்மா?
*இப்போதுதான் ஓ காதல் கண்மணி படம் பார்த்தேன். ஒருவேளை award committeeக்கு அறிவு இருந்தால் இதுவரை மம்முட்டிக்குக் கொடுத்த அவார்டுகளை திரும்ப வாங்கி துல்கர் சல்மானுக்குக் கொடுக்க வேண்டும்.
* துல்கரோடு ஒப்பிடுகையில் மம்முட்டி ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்.
* மம்முட்டி அவருடைய மகனிடமிருந்து யதார்த்தமாக நடிப்பது எப்படி என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.
* கேரளத்தினர் பெருமைப்படும் அளவுக்கு, கேரளா அல்லாத மாநிலங்களில் துல்கர் சல்மானுக்கு market value ஏற்பட்டிருக்கிறது. பல வருடங்களாக மம்முட்டியால் செய்ய முடியாத விஷயம் இது.
என்கிற ரீதியில் நக்கலடித்திருக்கிறார் வர்மா.
ராம்கோபால்வர்மாவின் பாராட்டை(?) நினைத்து துல்கர் சந்தோஷப்படுவாரா? அல்லது தன் அப்பாவை இழிவுபடுத்தியதை நினைத்து வருத்தப்படுவாரா?
=== CASTRO RAHUL ===