ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் தலிபான்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 50 பேர் பலியானார்கள்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் உள்ள சர்-இ-புல் மாகாணத்தில் கிராமம் ஒன்றில் நேற்று புகுந்த தலிபான் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக அனைவரையும் தாக்கியுள்ளனர்.
அவர்களது கொலைவெறித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 50 பேர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீவைக்கப்பட்டு நாசமாகின.
தலிபான்களுக்கு எதிராகப் தாக்குதல் நடத்திய ஆப்கானிஸ்தான் நாட்டு பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேரும் இத்தாக்குதலில் பலியானார்கள் என்று அம்மாகாண ஆளுநர் ஜபியுல்லா அமானி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் தாலிபான் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பினர் கூட்டாக நடத்தியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.