சிகிரியா- லேனவல கிராமத்தில், நபரொருவர் கூரிய ஆயுதமொன்றால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார். 42 வயதான நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் மனைவியே அவரைக் கொலைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து 33 வயதான அவரது மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குடும்பப் பிரச்சினையே கொலைக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.