ஒவ்வொரு நாடுகளிலும் பல்வேறு விதமான வினோதப் பழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன. அதில் சீனாவிற்கே முதலிடம் என்று சொல்லலாம்.
15 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் சிறுநீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து அதை கொதிக்க வைத்து, அதில் கோழி முட்டையை வேகவைத்து சாப்பிடும் பழக்கம் உள்ளது.
இதன்மூலம் உடலில் இரத்த ஓட்டம் சீராகி, உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் கிடைக்கின்றன என்று சீனாவின் பரம்பரை மருத்துவம் தெரிவிக்கிறது.
மேலும் ஸ்ப்லிட் பேண்ட் எனப்படும் பின்புறத்தில் ஓட்டை உள்ள ஆடைகளைக் குழந்தைகளுக்கு அணிவிக்கிறார்கள். இது அவர்கள் எந்தவித சிரமமுமின்றி இயற்கை உபாதைகளைக் கழித்துக் கொள்ள உதவுகிறது.