நடிகர் கமல்ஹாசன் உடன் 13 ஆண்டுகளாக லிவிங் டூகெதர் வாழ்க்கை வாழ்ந்தவர் நடிகை கௌதமி. சில மாதங்களுக்கு முன்னர் திடீரென கமலை விட்டு பிரிந்தார்.
மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார். தற்போது மலையாளம் உள்ளிட்ட சில மொழிகளில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கௌதமி, நடிகர் கமலுடன் மீண்டும் இணைய இருப்பதாக ஒரு காணொளி செய்தி வெளியாகியிருக்கிறது.
இந்த காணொளி செய்தியை பார்த்துவிட்டு கோபமாக ஒரு டுவிட்டர் பதிவை போட்டுள்ளார் கவுதமி.
அதில், 'முட்டாள்கள் பேசுகிறார்கள், நாய்கள் குரைக்கும். நான் விலகி வந்துவிட்டேன். எல்லோரும் அவரவரது வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ள வேண்டும். எது முக்கியமோ அதை செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.