திவிநெகும திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறியை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கடுவலை நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதாக க் கூறப்படும் மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் பஷில், உட்பட 3 பேர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பந்துல திலகசிறியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பந்துல திலகசிறி சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி அவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றும் படி கோரிக்கை விடுத்திருந்தார்.
இக் கோரிக்கையை ஆராய்ந்து பார்த்த நீதவான் அதனை ஏற்றுக்கொண்டதுடன் அவரை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.