காமெடி மற்றும் சிந்திக்க வைக்கும் கருத்துகளுடன் நம்மை எல்லாம் சிந்திக்க வைத்து சிரிக்க வைத்தவர் நகைச்சுவை நடிகர் விவேக்.
இவர் ஹீரோவாக நடிக்கும் படம் பாலக்காட்டு மாதவன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.இதில் சிவகார்த்திகேயன், அனிருத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய விவேக் இந்த படத்தில் நான் ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். அந்த பாடலை அனிருத் பாடினால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவரிடம் இந்த பாடலை காண்பித்தோம். அதை கேட்டதும், உடனே பாடிக் கொடுப்பதாக அவரும் சம்மதித்தார்.
அவரிடம் பேசிவிட்டு நான் அங்கிருந்து புறப்பட்டு வெளியே வந்துகொண்டிருந்தேன். அப்போது, சார் என்று ஒரு குரல் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தேன். அனிருத் அவருடைய கையில் செருப்பை தூக்கிக் கொண்டு ஓடிவந்து கொண்டிருந்தார். என்னடா இது, இப்போதுதான் ஓகே சொன்னார், அதற்குள் செருப்பை தூக்கிக் கொண்டு ஓடி வருகிறாரே என்று பயந்து போனேன்.
ஆனால், அவர் நான் தவற விட்டு வந்திருந்த செருப்பையே தனது கையில் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார். எவ்வளவு எளிமை இந்த வயதிலேயே என வியந்தேன் என்கிறார் அனிருத்.
-கோடம்பாக்கக் குருவி-