பங்களாதேஸ் கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் சஹிப் அல் ஹசன் 6 மாத காலம் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில்லை என்று முடிவு எடுத்துள்ளார்.
பங்களாதேஸ் அணியின் முன்னணி வீரர் ஷகிப் அல் ஹசன் பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயல்படும் இவர், டெஸ்ட் போட்டிக்கான சகலதுறை வீரர் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார்.
இவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கட் லீக் என அனைத்து வகை கிரிக்கட் தொடரிலும் விளையாடி வருகிறார்.
இதனால் பணிச்சுமை அதிகமாக உள்ளது எனக் கருதுகிறார்.
இதனால் 6 மாத காலம் டெஸ்ட் போட்டியில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்தார்.
இதுகுறித்து பங்களாதேஸ் கிரிக்கட் வாரியத்திற்கு ஷகிப் அல் ஹசன் கடிதம் எழுதியுள்ளார.
கடிதம் அனுப்பியதை ஒப்புக்கொண்ட பங்களாதேஸ் கிரிக்கட் வாரியம், 6 மாதம் ஷகிப் அல் ஹசனுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக டாக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பங்களாதேஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு ஷகிப் அல் ஹசன் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.