தமிழ் சினிமாவில் இன்று மிக உயர்ந்த இடத்தில் உள்ள ஒவ்வொரு நடிகர்களும் கஷ்டப்பட்டு தான் அந்த இடத்தை பிடித்துள்ளனர்.
இதில் சிவகார்த்திகேயனும் அடங்குவார்.
இவர் நடிக்க வருவதற்கு முன் சின்னத்திரையில் இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான், ஆனால் அதற்கும் முன்பாக இவர் கல்லூரியை முடித்த பிறகு ஊர் திருவிழா மேடைகளில் மிமிக்கிரி செய்து வந்தாராம்.
அப்படி ஊர் திருவிழாக்களில் மிமிக்கிரி செய்யும் போது இவர் முதல் முதலாக சம்பளமாக ரூ 1000 வாங்கினார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இருப்பினும் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது உறுதியாக தெரியவில்லை.
எனினும் , சிவகார்த்திகேயன் தற்போது படமொன்றுக்கு சுமார் 15 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது.