பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ஓவியாவிற்கு ரசிகர்கள் வட்டம் அதிகமானது.
ஓவியா ஆர்மி, ஓவியே நேவி என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் குழுக்கள் ஆரம்பித்து அவரை கொண்டாடினர்.
இதனிடையே ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
மீண்டும் அவரை நிகழ்ச்சிக்கு அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளபட்டன.
ஆனால், அவர் மறுத்து விட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் ஓவியா பிக்பாஸ் நிகழ்சியின் இறுதி நாளில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
வரும் 30ம் திகதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் நூறாவது நாள் மற்றும் இறுதி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியா கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.