நடிகர் ஜெய் மீதான வழக்கு குறித்து போக்குவரத்து காவற்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நடிகர் ஜெய் ஏற்கனவே குடிபோதையில் காரை ஓட்டிச்சென்று விபத்தை உண்டாக்கியதற்காக 2 முறை அபராதம் கட்டியுள்ளார்.
அடையாறு போக்குவரத்து காவற்துறை நிலையத்திலும், கிண்டி போக்குவரத்து காவற்துறை நிலையத்திலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது மீண்டும் அதே வழக்கில் 3-வது முறையாக சிக்கியுள்ளார்.
அவரிடம் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லை.
ஓட்டுனர் உரிமத்தின் நகல் தான் வைத்துள்ளார்.
அவரது காருக்கான ஆர்.சி. (பதிவு சான்று) புத்தகமும் இல்லை. இன்சூரன்சும் புதுப்பிக்கப்படவில்லை.
அவரது காரின் நம்பர் பிளேட் கூட விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இல்லை.
அவர் மீது நீதிமன்றில் தனியாகவும் வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
ஜெய் மீதான வழக்கில் நீதிமன்றில் அவருக்கு சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.