நடிகை சமந்தா, நாக சைதன்யா காதல் திருமணம் கோவாவில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்து முடிந்திருக்கின்றது.
பட்டு வேட்டி பட்டு சட்டை சகிதமாக நாக சைதன்யா மாப்பிள்ளை கோலத்தில் வரஇ திருமணத்துக்காக பிரத்யேகமாக வடிவமைத்தலெஹன்கா உடை அணிந்து மணமகள் கோலத்தில் வந்தார் சமந்தா.
பட்டு வேட்டி பட்டு சட்டை சகிதமாக நாக சைதன்யா மாப்பிள்ளை கோலத்தில் வர, திருமணத்துக்காக பிரத்யேகமாக வடிவமைத்தலெஹன்கா உடை அணிந்து மணமகள் கோலத்தில் வந்தார் சமந்தா.
மணவறைக்கு வருவதற்கு முன்பாக மெஹந்தி நிகழ்ச்சிநடந்தபோது திருமண பாடல்கள் பாடப்பட்டதுடன்இ நடனம் ஆடுவதற்கு ஏற்றவாறான இசைக்குஇ நடிகை சமந்தா மணமகள்உடையில் நடனமாடியிருந்தாராம்.
சமந்தாவின் நடனத்தில் பங்கேற்ற நாகர்ஜூனாஇ சின்ன மாமியார் அமலா மற்றும் உறவினர்களும் அவருடன் சேர்ந்து நடனம் ஆடிமகிழ்ந்தனராம். அத்துடன்இ மறுநாள் கிறிஸ்தவ முறைப்படியும் சமந்தா, நாக சைதன்யா திருமணம் நடந்து முடிந்திருக்கின்றது.
அதேவேளை, இன்று10ம் திகதி ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளது.
அத்துடன், இம்மாத இறுதியில்தேனிலவு கொண்டாட்டத்துக்காக புதுமணத் தம்பதி வெளிநாடு ஒன்றிற்கு செல்லவுள்ளனர்.
இது இப்படியிருக்க, தெலுங்கு திரைப்படவுலகில் பாரம்பரியமான மிகப் பெரிய குடும்பத்தில் வாழ்க்கை கிடைத்திருக்கும் இந்தவேளையில், புகைப்படப்பிடிப்பில் ஈடுபட்ட நடிகை சமந்தா, மிகக் குறைந்த உடைகளில் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார்.
இந்த புகைப்படப்பிடிப்பில் தோன்றியதற்கு, சமந்தாவிற்கு எதிராக கடும்
எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இவ்வாறு திடீரென உருவாகியுள்ள எதிர்ப்பினால் மிரண்டு போன சமந்தா, எதிர்வரும் காலங்களில் இவ்வாறான கவர்ச்சிதோற்றங்களில் புகைப்படப்பிடிப்புகளில் ஈடுபட மாட்டேன் என்று கணவர் நாக சைதன்யாவிற்கு சத்தியம் செய்திருப்பதாகவும், திரைப்படங்களிலும் கவர்ச்சியாக நடிக்கப்போவதில்லை என்று முடிவு செய்திருப்பதாகவும் கோடம்பாக்கம் செய்திகள்சொல்கின்றன.