பண்டிகை காலம் என்றாலே வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தான் அதிக வேலைகள் இருக்கும்.. அதிலும் என்னென்ன பலகாரங்கள் செய்வது, இனிப்பு பண்டங்கள் செய்வது என்று யோசிக்கவே நேரம் சரியாகிவிடும். அப்படிப்பட்ட பெண்கள் எவ்வாறு இலகுவாக ரவா கேசரி செய்வது என்பதைப் பார்க்கலாம் ..
தேவையான பொருட்கள்:
நெய் - 3 ஸ்பூன்
ரவை - 2 /1 கப்
தண்ணீர்- 1 கப்
சீனி - 3 / 4 கப்
திராட்சை
முந்திரி
ஏலக்காய் பொடி
ரவா கேசரி செய்யும் முறை:
ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு திராட்சை , முந்திரி ஆகியவற்றை பொன்நிறத்தில் நன்கு வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். பிறகு அதே பாத்திரத்தில் மிகுதி இருக்கும் நெய்யில் ரவையை போட்டு நன்கு வறுக்கவும். பிறிதொரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதித்த பிறகு வறுத்த ரவையை விட்டு கட்டிபடாமல் பாத்திரத்தில் ஒட்டா பதத்துக்கு மெதுவாக கிளறவும். பிறகு சீனியை விட்டு கிளறவும். கொஞ்சம் உருகும் பதத்திற்கு வந்ததும் கலரிங் மற்றும் கொஞ்சம் நெய் விட்டு கிளறி, நெருப்பின் அளவை குறைத்து 2 நிமிடங்கள் மூடி வைக்கவும்... பிறகு அடுப்பை அணைத்து வறுத்த திராட்சை , முந்திரி மற்றும் ஏலக்காய் பொடி ஆகிவற்றை சேர்த்து இறக்கினால் சுவையான ரவா கேசரி தயார்.