அவை இதோ
நாளைமுதல் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் தான் திரையரங்குகளில் வசூலிக்கவேண்டும்
திரையரங்க சிற்றுண்டிசாலைகளில் பொருட்களில் குறிப்பிடப்பட்ட விலையில் தான் விற்பனை செய்ய வேண்டும்
அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும்.
தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்கவேண்டும்.
வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிக்க கூடாது.
விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும்
மீறி செயல்படும் திரையரங்குகள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இவரது இந்த அறிவிப்பு கோலிவுட் வட்டாரத்தை அசர வைத்துள்ளது. ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.