சட்டவிரோதமான முறையில் ஜேர்மனி செல்ல முயற்சித்த இலங்கை பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டினை தயாரித்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜேர்மனி செல்வதற்காக கட்டாரில் இறங்கி (ட்ரான்சிட்) மாற்று விமானம் மூலம் செல்ல தயாரான நிலையில், சோதனை நடவடிக்கையின் போது போலி கடவுச்சீட்டில் வந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பெண் முதல் கட்ட விசாரணைகளின் போது உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் போது தனக்கு வாய்பேச முடியாது என தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து குறித்து பெண் வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தியதாகவும், சிகிச்சையின் பின்னர் அவருக்கு வாய்பேச முடியும் என வைத்தியர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பெண் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு, தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அச்சுவேலி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு சர்ச்சைக்குட்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.