இந்த நிலையில் மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து தவறான கருத்துகளை பரப்பும் காட்சிகளை நீக்கவேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து இன்று சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்து தவறான காட்சிகள் இடம்பிடித்துள்ளன.
தவறான கருத்துகளை பரப்பும் காட்சிகளை நீக்கவேண்டும். அவற்றை நீக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.
அரசியலுக்கு வருவதற்காக நடிகர் விஜய் தவறான தகவல்களை பரப்பி பொய் பேசி வருகிறார் என கூறியுள்ளார்.