மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற சாய் பல்லவி, அந்தப் படம் வெளிவந்த இரண்டு வருடங்கள் கழித்து இப்போது தான் 'கரு' தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தனுஷ் ஜோடியாக 'மாரி 2' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
சமீபத்தில் சாய் பல்லவி தெலுங்கில் அறிமுகமான 'பிடா' படமும் பெரிய வெற்றி பெற்று அங்கும் அவருக்கு ரசிகர்களைத் தேடிக் கொடுத்துள்ளது. தெலுங்கில் தற்போது நானி ஜோடியாக 'எம்சிஏ' படத்தில் சாய் பல்லவி நடித்துக் கொண்டிருக்கிறார்.
தெலுங்கு பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் சாய் பல்லவியை மலையாளப் பெண் எனக் குறிப்பிட்ட போது சாய் பல்லவி அவரிடம் கோபப்பட்டாராம். 'நான் மலையாளப் பெண் அல்ல, தமிழ்ப் பெண்,” என அவருக்கு பதிலளித்திருக்கிறார். மலையாளப் பெண் எனக் குறிப்பிட்டதற்கு சாய் பல்லவி ஏன் அவ்வளவு கோபப்பட்டார் என்பது தான் தெலுங்கு பத்திரிகையாளர்களிடம் தற்போது பேச்சாக உள்ளதாம்.
கோத்தகிரிகியை சொந்த ஊராகக் கொண்டு, கோயம்புத்தூரில் படித்து வளர்ந்த சாய் பல்லவியை அப்படிச் சொன்னால் ஏன் கோபப்பட மாட்டார். தற்போதுதான் தமிழ்ப் படங்களில் வேறு நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்த சமயத்தில் மலையாளப் பெண் என்று சொல்லலாமா...?. தமிழ் பேசத் தெரிந்த, தமிழ் நடிகை ஒருவர் மற்ற மொழிகளிலும் புகழ் பெறுவது சிலருக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது.