காலி - ஹினிதும ஓபான பிரதேசத்தில் 12 வயதுடைய சிறுவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓபான மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வந்த 8 ஆம் தர மாணவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கடந்த 27 ஆம் திகதி காலை குறித்த மாணவர் தனது தந்தையுடன், ஹினிதும நகருக்கு சென்றுள்ள போது, ஃப்ரய்ட் ரய்ஸ் (fried rice) வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.
இதனை அவரது தந்தை மறுத்துள்ளதனை தொடர்ந்து வீடு திரும்பி, இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவம் குறித்து ஹினிதும காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.