தொலைகாட்சி நிகழ்ச்சிக்குப் பிறகு கவிஞர் சினேகன் சினிமாவில் பிஸியாகிவிட்டார். ''எவனும் புத்தனில்லை'' படத்தில் உள்ள ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடிகையுடன் சினேகன் குத்தாட்டம் போட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நபிநந்தி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், மற்றொரு நாயகனாக ஷரத் என்ற புதுமுகம் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாயகிகளாக நிகாரிகா, சுவாசிகா இருவரும் நடிக்கின்றனர்.
ஒரே ஒரு பாடல் காட்சியில் பூனம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சங்கிலிமுருகன், நான் கடவுள் ராஜேந்திரன், பசங்க சிவகுமார், பாஸ்கரன உள்ளிட்டோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு பாடல் காட்சிக்கு சினேகன் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பாடலில் கவர்ச்சி நடிகையுடன் சினேகன் குத்தாட்டம் போடுவதாக செய்திகள் தெரிவித்துள்ளன.