அண்மையில் சவுதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து, படையினரால் ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு, ஈரான் உதவி அளித்ததாக சவுதி குற்றம் சுமத்தியதுடன், ஏமன் எல்லைகளையும் மூடியது.
ஏற்கனவே உள்நாட்டு போர் இடம்பெற்றுவரும் நிலையில்,சவுதியின் இந்த நடவடிக்கை பேரழிவுக்கு வழிவகுக்கும் என ஐ.நா சபை எச்சரித்துள்ளது.
இந்நிலையில் ஏமனில் உடனடியாக உதவி நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால், உலகளவில் இதுவே மிகப்பெரிய பஞ்சமாக இருக்கும் என, மனிதாபிமான கொள்கைகளுக்கான ஐ.நா சபையின் முக்கிய அதிகாரி மார்க் லோகல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் மில்லியன் கணக்கான மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 2015ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில், இதுவரையிலும் 8,670 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 49,960 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.