கடந்த வருடம் சின்னத்திரை நடிகை சபர்ணா தற்கொலை செய்து கொண்டமை ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மரணத்தால் திரையுலகமே அதிர்ச்சியடைந்து. இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் அவருடன் நெருங்கி பழகி வந்த நடிகை உஷா எலிசபெத் அண்மையில் சில கருத்துக்களை பதிவு செய்தார்.
தானும், தனது தோழியான சபர்ணாவும் நெருங்கி பழகி வந்தோம். கடந்த ஒரு வருடமாக சினிமாவில் எந்த வாய்ப்பும் வரவில்லை என தன்னிடம் சபர்ணா கூறியதாக உஷா தெரிவித்துள்ளார். இதுபற்றி சபர்ணா எல்லா நேரங்களையும் கண்ணீருடனேயே இருந்ததாக உஷா தெரிவித்துள்ளார்.
என்னை பொறுத்தவரை சபர்ணாவின் தற்கொலைக்கான காரணம் இதுவாக தான் இருக்க வேண்டுமென்று உஷா தெரிவித்துள்ளார்.