வாரம் ஒரு கோப்பை கோப்பி அருந்துபவர்களுக்கு , இதய நோய் ஆபத்து குறைவாக உள்ளது என விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பர்மிங்ஹாம் இதய ஆய்வு மையத்திற்கு கடந்த 34 ஆண்டுகளாக இதய பரிசோதனைக்கு வரும் 2750 பேரிடம் அவர்கள் சாப்பிடும் உணவை அடிப்படையாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது . அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கலிபோர்னியாவில் நடந்த அமெரிக்க அறிவியல் மற்றும் இதய கூட்டமைப்பில் நேற்று இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆய்வில் வாரம் ஒரு கோப்பை கோப்பி அருந்துபவர்களுக்கு இதயநோய் ஆபத்து குறைவாக உள்ளது என தெரியவந்துள்ளது.
கோப்பி அருந்தாதவர்களுடன் பிறரை ஒப்பிடுகையில் வாரம் ஒருமுறை, ஒரு கோப்பை கோப்பி அருந்துபவர்களுக்கு இதய நோய் ஆபத்து 7 சதவீதம் குறைவாக உள்ளது.
மேலும் இதய கோளாறு ஏற்படுவதும் 8 சதவீதம் குறைவாக உள்ளது. ஆனால், முந்தைய ஆய்வுகள் ஒரு குறிப்பிட்ட அளவு கோபி குடித்தால் தான் இதய ஆபத்து குறையும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வு, இதய செயல்பாடு குறைவு மற்றும் இதய நோய் தொடர்பான கூடுதல் தகவல்களை தந்துள்ளதாக ஆய்வில் பங்கேற்ற மூத்த விஞ்ஞானி டாக்டர் டேவிட் கோ தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆய்வு முடிவுகள், இதயம் தொடர்பாக இதுவரை கண்டறியப்படாத பிற ஆபத்துக்களை கண்டறிய உதவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது