சூரியக் கதிர்வீச்சு, மாசடைந்த காற்று, தற்கால உணவுப் பழக்கம், சரியான பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் எமது உடல் ஆரோக்கியமும், அழகும் சீரழிகின்றன. துரிதவகை உணவுகளைத் தவிர்த்து, காய்கறிகள், பழங்கள் மற்றும் சிறு தானியங்கள் என்பவற்றை எமது உணவாக எடுத்துக்கொள்வதன் மூலம் சருமத்தில் அதிக பொலிவை அடைய முடியும்.
கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது. இது எளிதில் பாதிப்படையக்கூடும். தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் காரணமாக, கண்களுக்குக் கீழ் கருவளையம் ஏற்படுகிறது.
கண்களுக்கு அழகு சேர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் காஜல், கண் மை போன்றவை தரமற்றதாக இருந்தாலும், கருவளையம் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எப்போதும் இயற்கையாகத் தயாரிக்கப்படும் கண் மையை உபயோகிப்பது நன்மை பயக்கும். எமது கண்கள் எந்நேரமும் குளிர்ச்சியாக இருக்க உதவும்.
கருவளையம் முற்றிலுமாக நீங்க, சத்தான உணவுகளை தினமும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கண்களின் கருவளையம் முற்றாக நீங்கும்.