சித்தர்கள், ஞானிகள், முனிவர்கள், மேதைகள், தவசிகள் அனைவரும் தங்கள் அனுபவத்தில் பார்த்து, இதற்கு பரிகாரமாக சில தெய்வீக மூலிகைகளை பற்றியும், மனிதன் வளமாக வாழ அந்த மூலிகைகளை எவ்வாறு பயன்படுத்துவது? என்பது பற்றியும் ஓலைச்சுவடிகளில் எழுதியுள்ளனர்.
அதனை நம் முன்னோர்கள், அனுபவபூர்வமாக உணர்ந்து, கிரக பாதிப்புகள், தோஷங்கள், செய்வினை கோளாறுகள், எதிரிகளால் வசப்பட்டு புத்தி பேதலித்த நிலையிலிருந்து விடுபட நல்ல வழியினை காட்டியுள்ளனர்.
அதன்படி நவக்கிரகங்களின் பாதிப்புகளிலிருந்து விடுபட, சரியான கிரகங்களை சாந்தி செய்து, அதற்குரிய மூலிகைகளை நம் தேகத்தில் தரித்து பூஜித்து வர, அந்த அந்த கிரகங்கள் கருணை கொண்டு நமக்குத் தேவையான நன்மைகளை செய்கின்றமை உறுதி.