மின்சாரம் தாக்கி களுவாஞ்சிக்குடி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர், பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றதாக களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் போது, துறை நீலாவணை 8 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் கலைவாணி என்ற 36 வயதுடைய பெண்ணே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் மகன் தொலைக்காட்சிக்கு மின்சார இணைப்பை வழங்க முற்பட்டுள்ளார். இதன் போது அவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.இதனை அறிந்த தாய் விரைந்து மகனைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார். இதன்போது தாயாருக்கு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த தாயின் மகன் எந்தவித பாதிப்புகளின் இன்றி உயிர் தப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.