கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளாவிற்கு வந்தார் பொலிவூட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன். அவரை காண ஊரே திரண்டு வந்தது. கூட்டத்தை கண்டு சன்னி லியோனே ஆச்சர்யமாகிவிட்டார். கேரளாவில் எனக்கு இவ்வளவு ரசிகர்களா என்று மகிழ்ச்சியில் திளைத்தவர், கூட்டத்துடன் தான் எடுத்துக்கொண்ட செல்பி படங்களை இணைய தள பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்தார். விரைவில் சன்னி லியோன் சென்னை செல்லவுள்ளார்.
அடுத்த மாதம் முதல்வாரம் அவர் சென்னை செல்வார் என்று தெரிகிறது. நடிகை ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சியில் சன்னி லியோன் பங்கேற்கிறார். வந்தவர் கையை அசைத்து டாட்டா காட்டிவிட்டு சென்றுவிடாமல் மேடையில் செம குத்தாட்டம் போடவும் ஏற்பாடு நடக்கிறதாம்.