அன்னாசிப்பழச்சாற்றை மூன்று நான்கு தடவைகள் சிறிதளவு குடித்து வந்தால் இடுப்பு வலி மாறும். அதோடு பழச்சாற்றை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கி வர தொண்டைவலி, தொண்டைப்புண் தீரும்.
அன்னாசி இலைச்சாறு வயிற்றின் பூச்சிகளை அழிக்கும் தன்மை கொண்டது.ஒரு கரண்டி தேன் கலந்து அருந்த, பேதியாகி வயிற்றுப்பூச்சிகள் வெளியேறிவிடும். இலையைப்பிழிந்து சாறு எடுத்து ஒரு கரண்டி சாறுடன், சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட, விக்கல், இழுப்பு நோய் ஆகியனவும் தீரும்.
அன்னாச்சிப்பழத்தில் விட்டமின் ஏ, பி, சி சத்துகள் அதிகம் உள்ளன.அதுமட்டுமல்லாமல் நார்ச்சத்து, புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளதால் இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் முகம் அழகாக மாறும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
அன்னாசிப் பழச்சாறுடன் தேன் கலந்து ஒரு மாத காலத்திற்கு சாப்பிட்டால் தலைவலி, பல்வலி, கண், காது, தொண்டை சம்மந்தபட்ட நோய்களும் தீரும்.