இதன் காரணமாக உலகளவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தேசிய குற்றப் பதிவுகள் அமைப்பின் கணக்கீடுகளின் படி, 2015 ஆம் ஆண்டில் 1,33,623 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசநோய், மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்களை விட தற்கொலையால் அதிக மக்கள் உயிரிழக்கின்றனர். நோயாளிகள் மன அழுத்தம் தொடர்பான அறிகுறிகளை முதலில் அறிந்த உடனேயே, குறைந்தது 10 ஆண்டுகளாவது தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிகிச்சை எடுக்க தவறினால், அது இயலாமை மற்றும் தற்கொலையில் முடிகின்றதாக கூறப்படுகிறது.
உளவியலாளர்கள் மூலம், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தற்கொலையை தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.எனினும் 98 முதல் 99 சதவீதம் தற்கொலைகளை, நடைமுறை பழக்கத்தால் மட்டுமே தடுக்க முடியும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.