இவரது மனுனை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் எனவும் உத்தரவில் கூறியிருந்தது.
இந்நிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அம்ருதா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் தான் ஜெயலலிதா மகள் என்று அனைவருக்கும் தெரியும். இது துணை முதலமைச்சராக இருக்கும் பன்னீர்செல்வத்துக்கும் தெரியும்.
நான் ஜெயலலிதாவை போயஸ்கார்டன், திராட்சை தோட்ட பங்களா மற்றும் தலைமை செயலகத்தில் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளோம்.இதனை வெளியில் சொன்னால் எனது உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்பதால் பலருக்கு இந்த உண்மை தெரியவில்லை.
மேலும், எனது உயிருக்கு சசிகலா குடும்பத்தால் அச்சுறுத்தல் உள்ளது எனவும் தெரிவித்திருந்தார். இவரது பரபரப்பான பேட்டியும், மனுத்தாக்கலும் மேலும் பரபரப்படைய செய்துள்ளது.
இன்னும் எத்தனை பேர் வரப்போறாங்களோ