2013-ம் ஆண்டு "விஸ்வரூபம்" படத்தை இயக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான சில காட்சிகளையும் சேர்த்து படமாக்கியிருந்தாராம் கமல். இந்த நிலையில், முதல் பாகத்துடனேயே இரண்டாம் பாகத்தின் காட்சிகளும் தயாராகின. இருந்தும், படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி சம்பந்தமான பிரச்சினையினால் இந்தப் படத்தின் அடுத்த பாகம் முழுவதும் படமாக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டு படம் பாதியிலேயே நின்றுவிட்டது.
படத்தின் நிலை இப்படியிருக்க, இத்தனை நாள் பொறுத்துப்பார்த்த உலக நாயகன் அண்மையில் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து "விஸ்வரூபம்-2" படத்தை வாங்கி, தானே வெளியிடும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். இடையில், பிக்பொஸ் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் கலந்து கொண்டு கலக்கினார். இதனால், கமலின் அடுத்த படம் வருமா...? வராதா..? என்று கவலைப்பட்டார்கள் அவரது ரசிகர்கள்.
கமல் ரசிகர்கள் கவலை இப்படியிருக்க, உலகநாயகனோ இவை எதையும் பற்றி கணக்கில் கொண்டதாக காட்டிக்கொள்ளவில்லை. எதிர்கால தமிழ்நாட்டின் அரசியல் பேச ஆரம்பித்தார் அவர். அரசியல் களத்தில் தனது இருப்பிற்கான அத்திவாரத்தை அமைக்கும் பணியிலும் இறங்கினார். இதனால், அடுத்த படத்தை இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது என்று ரசிகர்கள் சோர்ந்து போன நிலையில் "விஸ்வரூபம்-2" பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெருமளவு காட்சிகள் முன்னரே படமாக்கப்பட்டு விட்டதால், மீதமிருக்கும் சில காட்சிகளை சென்னையில் வைத்து படமாக்கும் வேலையில் இறங்கி விட்டாராம் கமல். இந்தநிலையில், விரைவில் "விஸ்வரூபம்-2" திரை காணும் என்கிறார்கள் படப்பிடிப்புக்கு குழுவினர்.