3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 127 நாடுகளை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோர்களும், 300 முதலீட்டாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகளும், அதிபரின் ஆலோசகருமான இவான்கா டிரம்ப் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவரோடு குழு ஒன்றும் வந்தது.
பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பும், மாநாட்டின் இடையேயும் மோடி- இவான்கா சந்திப்பு நடந்தது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இவான்கா டிரம்புக்கு புகழ்பெற்ற ஐதராபாத் பிரியாணி வழங்கப்பட்டது. இந்நிலையில் இவான்கா டிரம்ப்பிற்கு நினைவு பரிசாக பாரம்பரிய மிக்க கலைநயமிக்க மரப்பெட்டகத்தை பிரதமர் மோடி வழங்கினார்.
இதில் பங்கேற்க நடிகை சமந்தா இவான்கா டிரம்பிற்கு சேலை பரிசளித்தார்.அதற்கு பொருத்தமான பரிசு பற்றி ஆலோசித்தவர் இறுதியாக கோல்லம்பமா சேலைகளை வழங்க முடிவு செய்தார். கைத்தறியில் இது நெய்யப்படுகிறது. அவரது தேர்வை அரசு அங்கீகரித்ததுடன் தனது பங்காகவும் அதே வகையில் உருவாக்கப்பட்ட பல்வேறு டிசைன் சேலைகளையும் இவாங்காவுக்கு வழங்கியது.
இதையடுத்து இவான்காவுடன் பாரம்பரியமான கோல்லம்பமா சேலைகளும் வெள்ளை மாளிகைக்கு செல்கிறது. நடிப்பு, இல்லற வாழ்க்கையில் சமந்தா கவனம் செலுத்தி வந்தபோதும் கைத்தறி ஆடைகளை விளம்பரப்படுத்தும் தூதராகவும் தனது பங்களிப்பை செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.