Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
06
வெறிநாய் கடித்தால் செய்ய வேண்டிய வழிமுறைகள் ...!!

tips - வெறிநாய் கடித்தால் செய்ய வேண்டிய வழிமுறைகள் ...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,749 Views
நாய் கடித்துவிட்டால் உடனடியாக செய்ய வேண்டிய சிகிச்சைகளை தவிர்த்து, பதற்றத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மாற்று சிகிச்சைகளை மேற்கொள்வதால் தான் விளைவுகள் அதிகரிக்கின்றன.
 
 
 
 

முதலுதவி

முதலில் கடித்த இடத்தில் கிருமிகளின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக நாய் கடிபட்ட இடத்தை உடனே சோப்பு நீரால் பலமுறை நன்கு கழுவ வேண்டும். வேகமாக விழுகிற குழாய் நீரை திறந்துவிட்டு 5 நிமிடங்கள், நன்கு ரத்தம் வெளியேறும்வரை கழுவிவிட்டு அதன் மேல்  டிஞ்சர் அயோடின் போன்ற மருந்தை தடவலாம்.

பின்பு, தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று, முறையான சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். கடித்தது வெறி நாயாக இருந்தாலும், சாதாரண நாயாக இருந்தாலும் முதலில் தடுப்பூசியை கண்டிப்பாக போட வேண்டும். ஏனெனில் நாம் வளர்க்கும் சாதாரண நாய், குட்டிநாய்க்கு வெறிநோய் (ரேபிஸ்) தாக்கம் இருப்பது நமக்கு தெரிய வாய்ப்பில்லை.
 
கடித்தது வெறிநாயாக இருந்தால் 10 நாட்களில் வெறி நோய்க்கான அறிகுறிகள் தென்படும். அனைத்து உயிரற்ற பொருட்களையும் கடித்தல், வழக்கத்துக்கு மாறாக குரல் எழுப்புதல், உணவு எடுத்துக் கொள்ளாமை, தண்ணீரைப் பார்த்தால் ஒவ்வாமை, அதிக உமிழ்நீர் சுரத்தல், தாடை தொங்கி விடுதல், தண்ணீரை விழுங்க முடியாமல் போவது, பின்கால்களில் தளர்ச்சி போன்ற அறிகுறிகள் அந்த நாய்க்கு, கடித்த 10 நாட்களில் ஏற்பட்டால் வெறிநோய் தாக்கப்பட்டு இருப்பது நிச்சயம்.
 
இதற்காக 10 நாட்களுக்கு காத்திராமல், கடித்த அன்றே தடுப்பூசி போட ஆரம்பித்துவிட வேண்டும். முதல் தடுப்பூசி மட்டும் போட்டுவிட்டு, நாம் தடுப்பூசி போட்டுவிட்டோம் என நிறுத்திவிடக் கூடாது. நாய் கடித்தவுடன் வெறிநோய் தடுப்பூசிபோடுவது மட்டுமே உயிரை காக்கும்.
 
நாய் கடித்த இடத்தில் கட்டுப் போடக்கூடாது. சூரிய ஒளியில் இந்த வைரஸ் கிருமிகள் இறந்துவிடும் என்பதால் காயத்தை மூடாமல் வைத்திருப்பது நல்லது. திறந்த காயமென்றாலும், ஆழமான காயமென்றாலும் கட்டு போட்டு மூடக்கூடாது.
 
நாய் கடித்த இடத்தில் கிருமிகள் உடலை விட்டு வெளியேறுவது தடைபடும் வகையில், சுண்ணாம்பு, சந்தனம், சாம்பல், பச்சிலைச்சாறு போன்றவற்றைத் தடவக் கூடாது. டிடி ஊசி – இது எந்த விலங்கு கடித்தாலும் போடவேண்டியது. 
 
தடுப்பூசி போடும் போது உணவில் கட்டுப்பாடு அவசியம் இல்லை. எவ்வகை உணவையும் உண்ணலாம். ஆனால் மது மட்டும் அருந்த கூடாது. மதுபானம் நம் உடலின் எதிர்ப்புத் திறனை மிகவும் குறைப்பதால் நுண்கிருமியினால் விளையும் சேதம் அதிகரிக்கும்.
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top