ஆசிரியராக பணியாற்றும் கணவரும் , இளம் பெண் ஒருவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், முதலிரவின் போது தனது மனைவியை பிளேடால் கணவர் கீறியுள்ளார், இதில் ரத்த வெள்ளத்தில் அலறிய பெண்ணை அவரது பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் எதற்காக கணவர் இவ்வாறு செய்தார் என்பது குறித்து நடத்திய விசாரணையில், தனக்கு ஆண்மை குறைபாடு உள்ளதென மணமகன் தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு மனைவி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மனைவி கேள்வி கேட்டுள்ளார்.
ஆனால் இந்த விஷயத்தை யாரிடமும் வெளியே கூறக்கூடாது என கணவர் கூறியுள்ளார். ஆனால் தனது வாழ்க்கை பாழாகி விட்டதாக வெளியில் சென்று தனது தாயிடம் மகளான இளம் மனைவி கூறியுள்ளார்.
இதனை கேட்ட மணமகளின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பின் முதலிரவு அறைக்கு வந்த தனது மனைவியை, ‘ஏன் இந்த விஷயத்தை வெளியே கூறினாய்?’ என கேட்டு கணவர் கண்மூடித்தனமாக அடித்துள்ளார்.
முதலிரவு அறையில் இருந்து மகளின் அலறலைக் கேட்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று இளம் மனைவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
இதுகுறித்து இளம் மனைவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கணவரயும் அவரது தந்தையையும் பொலிசார் கைது செய்தனர்.