Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
08
என்னுடைய அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன் - நடிகர் விஷால்

actor vishal rk election - என்னுடைய அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன் - நடிகர் விஷால்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,990 Views
ஆர்.கே.நகரில் இடம்பெறவிருந்த இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயட்சையாக போட்டியிடுவதாக வேட்பு மனு கொடுத்திருந்தார்.பல பிரச்சினைகள் சண்டைகளை தொடர்ந்து ஒரு சில காரணங்களால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.ஆனால் நடிகர் விஷால் தொடர்ந்து, அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
 

ஆர்.கே.நகர் மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென்பது என் ஆசை. நல்லது செய்வதென்பது இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால்தான் செய்யவேண்டும் என்பதல்ல.நல்லதை வெளியில் இருந்தும் ஆர்.கே.நகர் மக்களுக்கு செய்வேன் என்று வேட்பு மனு நிராகரிக்கப்பதன் பின்பு நடிகர் விஷால் கூறியிருக்கிறார். சுயட்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக செய்திகள் வெளியானபோது இதுதொடர்பில் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆர்.கே.நகர் மக்களுக்கு மக்கள் பணியாற்றவே என் சுய சிந்தனையின் பிரகாரம் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிட நான் மனுத்தாக்கல் செய்தேன் ஆனால் பவர் பாலிடிக்ஸ் என்னும் ஆதிக்க அரசியல் சக்திகளால் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு என் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

எனக்கு நேர்ந்த அநீதிக்கு மக்கள் மன்றமே சாட்சி. போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் என் பணிகள் மக்களுக்காக என்றும் தொடரும்.இதையும் தாண்டி நான் சிலருக்கு ஆதரவு வழங்குவதாக செய்தி பரப்பப்படுகிறது. நான் யாரையும் ஆதரிப்பதாக இதுவரை சொல்லவில்லை. அப்படி ஒரு முடிவையும் நான் எடுக்கவில்லை. இந்த வேளையில் நான் நன்றிசொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன் .மிக முக்கியமாக என்னுடன் போராட்டத்தில் என்னுடன் பக்கத்துணையாக நின்ற எனது ரசிகர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

அதேபோல் எனக்காகவும் நீதிக்காகவும் குரல் கொடுத்த அனைத்து தலைவர்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன். ஆளுங்கட்சிக்கு ஒரு கோரிக்கை... ஆர்.கே.நகர் தேர்தல் உங்களுக்கு முக்கியம் தான். ஆனால் அதைவிட முக்கியம் கன்னியாகுமரியில் நடக்கும் குளச்சல் மீனவர்கள் போராட்டம். மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் முக்கியம். நியாயமான கோரிக்கைகளுடன் இரண்டு நாட்களாக போராடிவருகின்றார்கள்.

போராடி வரும் மீனவர்களை உடனே சந்தித்து பேசி அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள். ஆர்கே நகர் மக்கள் கூட இதைத் தான் எதிர்பார்க்கிறார்கள். இது உங்களுக்கு நல்ல பெயரைத் தான் கொடுக்கும். மீனவர்கள் சார்பிலும் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் சார்பிலும் இந்த கோரிக்கையை வைக்கிறேன். என்று நடிகர் விஷால் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top