9 கோடிக்கு ஏலம்போன எலும்புக்கூடு 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மம்மூத் இன யானைகள் வாழ்ந்தன. ராட்சத உருவத்துடன், நீண்ட வளைந்த தந்தங்களையும் கொண்ட அந்த யானை பருவநிலை மாற்றம், மனிதர்களின் வேட்டையாடும் செயல்கள் உள்ளிட்ட காரணங்களால் அழிந்துவிட்டது. தற்போது மம்மூத் இனம் உலகில் இல்லை.
அத்தகைய இன யானையின் முழு உடல் அமைப்புடன் கூடிய எலும்புக்கூடு 10 ஆண்டுகளுக்கு முன்பு சைபீரியாவில் தோண்டி எடுக்கப்பட்டது
பிரான்சின் லியான் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. தனியார் நிறுவனத்திடம் உள்ள, மிகவும் விலை உயர்ந்த பழங்கால ரோமங்கள் உள்ள யானை எலும்புக்கூடு இதுவாகும். இதிலுள்ள 80% எலும்புகள் உண்மையானவை என்பதால், இது, மிகவும் அறியவகையாகும். மீதமுள்ள 20 சதவிகிதம், பிசின் கலந்து, அதன் உருவம் முடிக்கப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடு, ஒரு ஆண் யானையுடையதாகும்.
அந்த எலும்புக் கூடு 5 லட்சத்து 48 ஆயிரத்து 250 யூரோவுக்கு (இலங்கை ரூபாய் மதிப்பில் 9 கோடியே 90 லட்சத்து 60 ஆயிரத்து 299) ஏலம் போனது. பிரெஞ்ச் பொட்டார் புரூப்பிங் கம்பெனி இதை ஏலம் எடுத்துள்ளது. இது இக்கம்பெனியின் அடையாள சின்னமாக ஏற்கனவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எலும்புக்கூடாக உள்ள இந்த மம்மூத் யானை உயிருடன் இருந்தபோது 1400 கிலோ எடையுடன் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.