பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி) தனது கணவரிடம் விவாகரத்து கோரி இந்திய சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம்திகதி நடிகை டிடி தனது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். டிடிக்கும் அவரது கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என கூறப்படுகிறது.
தனுஷ் இயக்கத்தில் ப.பாண்டி படத்தில் மீண்டும் சினிமாவில் மீண்டும் நடித்தார் டிடி. தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகிறார்.இந்நிலையில், திரைப்படங்களில் நடிப்பதற்கு டிடியின் கணவர் வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் டிடி-க்கும் ஸ்ரீகாந்துக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.
தற்போது, இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற விரும்பி இந்திய சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தையும், அதன் பிறகு நடைபெற்ற திருமண பதிவையும் ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பரஸ்பர முறையில் விவாகரத்து கோரியுள்ளதால் ஆறு மாதகால அவகாசம் அளிக்கப்பட்டு பின்னர் விவாகரத்து பெறும் முடிவில் உறுதியாக இருந்தால் விவாகரத்து வழங்கப்படும். எனவே, டிடி-க்கு விரைவில் விவாகரத்து கிடைக்கும் என தெரிகிறது