Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
08
குடும்ப பொறுப்புக்காக காதலை துறந்து தவிக்கும் இரு இதயங்கள்.-சூரியனின் இதயத்தோடு இதயம்.............

SooriyanFM H2H - குடும்ப பொறுப்புக்காக காதலை துறந்து தவிக்கும் இரு இதயங்கள்.-சூரியனின் இதயத்தோடு இதயம்.............Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,325 Views
இதயம் சிலரை இலகுவில் நினைத்துவிடுகிறது, ஆனால் மறப்பதென்னவோ அவ்வளவு இலகுவானதல்ல. மறப்பதற்க்கொரு இதயமிருந்தால் உலகில் மகிழ்ச்சி நிறைவாகவே இருந்திருக்கும். மகிழ்ச்சிக்காக ஏங்கும் மனது மறக்க அறிந்திருந்தால் மகிழ்ச்சி மலிவாய் கிடைத்திருக்கும். வாசு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரும் இன்று தொலைத்த மகிழ்ச்சியை தேடிக்கொண்டிருக்கும் உலகின் இன்னொரு சராசரி ஜீவன்.
வாசு கிழக்கு மாகாணத்தின் எழிழ் கொஞ்சும் கிராமமொன்றில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் சாதாரண குடும்பத்தின் பொறுப்பு மிக்க ஆண் பிள்ளை. அம்மா, அப்பா இரண்டு சகோதரிகள். விவசாயத்தையே அடிப்படையாக கொண்ட குடும்பத்தில் அரசாங்க உத்தியோகம் செய்யும் ஆண் மகன் என்றால் அவனது கடமைகளின் சுமைகள் சொல்லித்தெரிய வேண்டியதில்லை . தலைக்குமேலே கடமைகள் இருந்தாலும் இளமை இதயம் இவனுக்குள் இன்னும் கன்னித்தன்மையோடு காத்திருந்தது கன்னி ஒருத்திக்காய் .

அந்த நேரத்தில் தான் அவளை சந்திக்கிறான். அவள் பெயர் நித்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வேற்று மாகாணத்தை சேர்ந்த அவள் தொழில் நிமித்தம் தலைநகர் வந்த வேலை வாசுவை சந்திக்கிறாள். முதலில் இருவரும் முகப்புத்தகத்தில் நண்பர்களாகின்றார்கள். முகப்புத்தக குறுந்தகவல்கள் இருவரின் நெருக்கத்தை அதிகரிக்கிறது. நட்பு காதலாக இருவரும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்கிறார்கள். ஓரிரு ஆண்டுகள் நண்பர்கள் காதலர்களாக உறவாட, காதலின் முழுமை காண திருணம் செய்துகொள்வதென்கிற தீர்மானத்துக்கு வருகிறாள் நித்யா.

இங்குதான் இதுவரை சுமுகமாக சென்றுக்கொண்டிருந்த இருவரின் உறவும் கொஞ்சம் நிலை தடுமாறுகிறது. தன காதலை தன் குடும்பத்தினரிடம் தெரிவித்த நித்யா அவர்களின் சம்மதம் பெற்று வாசுவிடம் இதுகுறித்து தெரிவிக்கிறாள். ஆனால் நித்யா எதிர்பார்த்தது போல வாசு இந்த செய்தி கேட்டு மகிழ்ச்சி அடையவில்லை. மாறாக நித்யாவை கடிந்தே கொண்டான் ஏனெனில் நித்யா தனது இரண்டு சகோதரிகளுக்கும் திருமணம் செய்துவைக்கவேண்டிய பொறுப்பு தன்னிடமே உள்ளது என்பது அறிந்தும் இவ்வாறு பேசுகிறாள் என்று தான் என்றாலும் நித்யா தன் நிலைமை குறித்து வாசுவிடம் எடுத்துரைக்கிறாள். இங்கு வாதம் முற்ற மனவேதனையோடு இருவரும் அன்று பிரிகிறார்கள்.

அன்றிலிருந்து சந்திக்கிற ஒவ்வொரு நாளும் இருவரும் இது குறித்து விவாதிப்பதும் சண்டையிடுவதுமாகவே நகர்கிறது இந்த விவாதம், அதற்கு பிறகு இருவரும் சந்திப்பதும் பேசிக்கொள்வதும் குறைகிறது. நித்யாவும் இடமாற்றம் பெற்று வேலைக்காக வேறு இடம் செல்கிறாள். இன்று இருவரும் வெவ்வேறு இடங்களில் ஆனால் உடலால் பிரிந்த இவர்களின் உள்ளங்கள் இன்றும் இணைந்தே இருக்கிறது. கடமைக்காக காதலை துறந்த வாசுவும், நித்தியாவும் இதயத்தால் இணைந்தே வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். கண்ணீரை குடும்ப திரையிட்டு மறைத்தபடி.............

உங்கள் பிரச்சனைகள் குறித்தும் மனம் திறந்து பேச இதயத்தோடு இதயம் வாரநாட்களில் இரவு 9 மணிமுதல் 12 மணிவரை. அழையுங்கள் 0112346744 அல்லது 0114790760 ,0114799750 இலக்கங்களுக்கு. "சூரியனின் இதயத்தோடு இதயம் எந்தன் சப்தமும் உங்கள் நிசப்தமும் சந்திக்கும் புள்ளியில் வேதனைகளுக்கு ஆறுதல் தேடும் முயற்சி" மீண்டும் சந்திப்போம்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top