ராஜா ராணி தொலைக்காட்சி தொடரில் செம்பாவாக நடித்து வரும் நடிகை ஆல்யா மானசா ஜப்பான் காவல்துறையிடம் சிக்கி படாதபாடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.
ராஜா ராணி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. அந்த தொடரில் அவர் அப்பாவி பெண் செம்பாவாக தோன்றுகிறார்.
ராஜா ராணியில் அவ்வளவு அப்பாவியாக இருக்கும் செம்பா நிஜத்தில் தலைக்கனம் இல்லாமல் படபடவென பேசும் மொடன் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஜப்பானில் காவல்துறையிடம் சிக்கிய அனுபவத்தைக் கூறினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:
நான் ஜப்பான் மொழி கற்றுள்ளேன். சமீபத்தில் ஜப்பான் சென்றபோது காவத்துறையிடம் மாட்டிக் கொண்டேன். அங்கு சைக்கிளில் டபுள்ஸ் போகக் கூடாது. நான் கெத்து காட்டுவதற்காகவும், வாட்ஸ் அப்பில் படங்கள் போடுவதற்காகவும் சீன தோழியுடன் டபுள்ஸ் போனேன். அப்படி போனபோது வீதியில் நின்ற காவல் துறையினர் வழிமறுத்து கடவுசீட்டைடை கேட்டார்கள். பின்னர் பாவப்பட்டு எச்சரித்துவிட்டனர். அவர்களிடம் சிக்கிக் கொண்டு சிறிது நேரம் படாதபாடுபட்டேன் என்றார் அவர்.