20- ஆஸ்திரேலியாவில் ஆளில்லா விமானம் மூலம் வியாழக்கிழமை முதல் முறையாக மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. கடல் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கிக் கொள்பவர்களை அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மீட்பதில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில், மீட்பு பணிகளில் ஆளில்லா விமானத்தை பயன்படுத்துவது குறித்து அந்த நாடு சோதனை அடிப்படையில் பல திட்டங்களை செயல்படுத்தி வந்தது.
இந்த நிலையில், நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள லென்னக்ஸ் ஹெட் கடற்கரைப் பகுதியில் வியாழக்கிழமை சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரண்டு சிறுவர்கள் ராட்சத அலையில் ஆபத்தில் சிக்கிக் கொண்டனர்.அவர்கள் உயிருக்கு போராடுவதைக் கண்ட சிலர் அபாய ஒலியை எழுப்பினர். இதையடுத்த அலர்ட் செய்யப்பட்ட ஆளில்லா விமானம் விபத்தில் சிக்கியுள்ளவர்களின் பகுதியை சில விநாடிகளில் சென்றடைந்தது. மேலும், ஆபத்தில் சிக்கிய வர்களின் உயிர்களை காக்கும் வகையில் அதற்கான உபகர ணங்களையும் ஆளில்லா விமானம் வழங்கியது. இதையடுத்து, நடுக்கடலில் தத்தளித்த அந்த இரண்டு சிறுவர்களும் பத்திர மாக கரை திரும்பினர். கடலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தத்தளித்தவர்களை ஆளில்லா விமானம் மூலம் மீட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.