திருச்சூரில் உள்ள திருவம்பாடி ஆலயத்தில் நடிகை பாவனா – நவீன் திருமணம் நேற்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இவர்களது திருமண நிகழ்ச்சியில் மிகமுக்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்கள், திரைத்துறையினர் மட்டுமே கலந்து கொண்டனர். பாவனாவின் தோழி நடிகை ரம்யா நம்பீசன், பாடகி சயனோரா ஆகியோர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.
நேற்று மாலை நடிகை பாவனா திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமான முறையில் திருச்சூர் லூலூ சென்டரில் நடைபெறுகிறது. திருமண வரவேற்பில் மலையாள திரையுலகை சேர்ந்த முக்கிய நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், நடிகை பாவனாவுக்கு பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா வாட்ஸ்-அப் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது வாழ்த்தை வீடியோவாக பதிவு செய்து அதை அவர் பாவனாவுக்கு அனுப்பி உள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் உங்கள் திருமண வாழ்க்கை மிக மகிழ்ச்சிகரமாக அமைய எனது வாழ்த்துக்கள். உங்கள் வாழ்க்கை பயணத்தில் இனி பெரிய வெற்றி கிடைக்கும் என்று பிரியங்கா சோப்ரா குறிப்பிட்டுள்ளார். அவரது வாழ்த்து பாவனாவுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளதாக அவரது தோழி ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.